செய்திகள்
தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் பாலமாக செயல்படுவேன்- டாக்டர் தமிழிசை பேட்டி
தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே பாலமாக செயல்பட உள்ளதாக, தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை:
தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே பாலமாக செயல்பட உள்ளதாக, தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் பதவி என்பது கட்சி எனக்கு அளித்து இருக்கும் அங்கீகாரம். இந்த பதவியை பெற்றதை தொடர்ந்து உறவிற்கான அங்கீகாரத்தை அனைத்து தரப்பினரும் வழங்கி வருகிறார்கள்.
அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், பொதுமக்கள் என் மீது கொண்டுள்ள அன்பும், ஆதரவும் நெகிழ வைக்கிறது. என்னை பொறுத்தவரை தமிழகத்துக்கு வளர்ச்சியை தர பணியாற்ற வேண்டியது எனது உரிமை. அதே போல் தெலுங்கானா மக்களுக்காக பணியாற்ற வேண்டியது எனது கடமை. இரண்டு மாநிலங்களுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன்.
தெலுங்கானா மாநில அதிகாரிகள் இன்று மாலை சென்னை வருகிறார்கள். அவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பதவி ஏற்பு தேதி உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே பாலமாக செயல்பட உள்ளதாக, தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் பதவி என்பது கட்சி எனக்கு அளித்து இருக்கும் அங்கீகாரம். இந்த பதவியை பெற்றதை தொடர்ந்து உறவிற்கான அங்கீகாரத்தை அனைத்து தரப்பினரும் வழங்கி வருகிறார்கள்.
அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், பொதுமக்கள் என் மீது கொண்டுள்ள அன்பும், ஆதரவும் நெகிழ வைக்கிறது. என்னை பொறுத்தவரை தமிழகத்துக்கு வளர்ச்சியை தர பணியாற்ற வேண்டியது எனது உரிமை. அதே போல் தெலுங்கானா மக்களுக்காக பணியாற்ற வேண்டியது எனது கடமை. இரண்டு மாநிலங்களுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன்.
தெலுங்கானா மாநில அதிகாரிகள் இன்று மாலை சென்னை வருகிறார்கள். அவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பதவி ஏற்பு தேதி உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.