செய்திகள்
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் 26-ந்தேதி கடைகள் அடைப்பு

Published On 2021-11-22 11:53 GMT   |   Update On 2021-11-22 11:53 GMT
மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூரில் நூல் விலை உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் பின்னலாடை தொழிலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.   

இதுகுறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.  

இதில் பின்னலாடை தொழில் துறையினர், தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.  

ஆலோசனை முடிவில் நூல் விலை உயர்வை கண்டித்தும், பருத்தி ஏற்றுமதியை தடை செய்யக்கோரியும் வருகிற 26-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 
Tags:    

Similar News