செய்திகள்
விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறது காங்கிரஸ் - மத்திய மந்திரி தோமர் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சி விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறது என மத்திய விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர் குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி:
மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகள் அதிக சுதந்திரம் மற்றும் நியாயமான விலையை பெறுவர். காங்கிரஸ் கட்சி விவசாயிகளை தவறாக வழிநடத்ததுகிறது. அதன்மூலம் தனது கட்சியையும் நாட்டையும் பலவீனப்படுத்துகிறது.
குறைந்தபட்ச ஆதார விலை அரசாங்கத்தின் கொள்கை முடிவு, அது தொடரும். விவசாயிகள் தங்கள் பொருட்களை மண்டியின் எல்லைக்கு வெளியே விற்க முடியும் என தெரிவித்துள்ளார்.