செய்திகள்
கைது

வள்ளியூரில் முதியவரை மிரட்டி பணம் பறித்த ராணுவ வீரர் கைது

Published On 2021-10-16 09:36 GMT   |   Update On 2021-10-16 09:36 GMT
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் முதியவரை மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 69). இவர் அந்த பகுதியில் உள்ள மதுக்கடை அருகே பாட்டில்களை எடுத்து விற்பனை செய்து வந்தார்.

நேற்று இரவு இவர் வள்ளியூர் மதுக்கடை அருகே நின்ற போது அங்கு குடிபோதையில் வள்ளியூரை சேர்ந்த மணிகண்டன், அவரது நண்பரான நாகர்கோவில் சுசீந்திரத்தை சேர்ந்த ராணுவ வீரர் நாகராஜன் (39) என்பவரும் வந்தனர்.

இருவரும் மாசிலாமணியை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்தனர்.

இதுதொடர்பாக மாசிலாமணி, அந்தப் பகுதிக்கு வந்த போலீசாரிடம் புகார் செய்தார்.

உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று ராணுவ வீரர் நாகராஜன், மணிகண்டன் ஆகிய 2பேரை யும் கைது செய்தனர்.
Tags:    

Similar News