செய்திகள்
திருப்பூர் எஸ்.பி., கார் கவிழ்ந்து விபத்து - டயர் வெடித்ததால் விபரீதம்
இன்று அதிகாலை 3 மணியளவில் திருப்பூர் செங்கப்பள்ளி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென காரின் டயர் வெடித்தது.
திருப்பூர்;
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் சசாங் சாய். நேற்று இவர் ஒரு வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் ஆஜராவதற்காக சென்னை சென்றார். கோர்ட்டில் ஆஜராகியதுடன் பல்வேறு பணிகளை முடித்து விட்டு நேற்றிரவு திருப்பூருக்கு புறப்பட்டார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் திருப்பூர் செங்கப்பள்ளி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென காரின் டயர் வெடித்தது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் எஸ்.பி., சசாங் சாய் மற்றும் டிரைவர் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
உடனே அந்த வழியாக சென்ற பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் எஸ்.பி., வீடு திரும்பினார்.