செய்திகள்
கைது

நாமக்கல்லில் பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது

Published On 2021-03-22 05:00 GMT   |   Update On 2021-03-22 05:00 GMT
நாமக்கல்லில் பணம் வைத்து சூதாடிய 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்:

நாமக்கல்- சேலம் சாலை பதிநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக நாமக்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். இதில் ஞானவேல் (வயது 52), செந்தில்குமார் (50), ஈஸ்வரமூர்த்தி (52), திருநாவுக்கரசு (40), விஸ்வநாதன் (62) உள்பட மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து சூதாட பயன்படுத்தப்பட்ட ரூ.74 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News