செய்திகள்
இடமாற்றம்

வேளாண் துறையில் அதிரடி- 17 அதிகாரிகள் இடமாற்றம்

Published On 2021-11-19 04:00 GMT   |   Update On 2021-11-19 04:00 GMT
வில்லியனூரில் பணியாற்றிய ஜோதி கணேசன் மார்க்கெட்டிங் பிரிவுக்கும், தட்டாஞ்சாவடியில் பணியாற்றிய பிரியதர்ஷிணி தாவரவியல் பூங்காவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
புதுச்சேரி:

புதுவை வேளாண்துறையில் பணியாற்றி வரும் வேளாண் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி மதகடிப்பட்டு உழவர் உதவியகத்தில் பணியாற்றும் தமிழ்செல்வன், திருக்கனூருக்கும், விதை சான்றளிப்பு அதிகாரி பார்த்திபன் மதகடிப்பட்டு உழவர் உதவியகத்துக்கும், திருக்கனூர் உழவர் உதவியகத்தில் பணியாற்றிய தனசேகரன் கரிக்கலாம்பாக்கத்துக்கும், பூச்சி மருந்து சோதனை ஆய்வகத்தில் பணியாற்றும் பிரேமானந்தன் பாகூர் உழவர் உதவியகத்துக்கும், பாகூரில் பணியாற்றிய மாசிலாமணி கரையாம்புத்தூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

சேலியமேட்டில் பணியாற்றிய கோகுலலட்சுமி தாவரவியல் பூங்காவிற்கும், கரையாம்புத்தூரில் பணியாற்றிய இளந்திரையன் தட்டாஞ்சாவடிக்கும் (தொழில்நுட்பம்), கரிக்கலாம்பாக்கத்தில் பணியாற்றிய ராஜவேல் விதை சான்றளிப்பு அதிகாரியாகவும், தாவரவியல் பூங்காவில் பணியாற்றிய கலைசெல்வன் பூச்சி மருந்து சோதனை ஆய்வகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒதியம்பட்டில் பணியாற்றிய வேலுமணி, தட்டாஞ்சாவடிக்கும் (தொழில்நுட்பம்), அங்கு பணியாற்றிய தினகரன், ஒதியம்பட்டு உழவர் உதவியகத்துக்கும், பிரபாகரன் வனத்துறைக்கும், வனத்துறையில் பணியாற்றிய சிவக்குமார் கரியமாணிக்கம் பண்ணைக்கும், அங்கு பணியாற்றிய செல்வகணபதி தட்டாஞ்சாவடிக்கும் (தொழில்நுட்பம்), வில்லியனூரில் பணியாற்றிய ஜோதி கணேசன் மார்க்கெட்டிங் பிரிவுக்கும், தட்டாஞ்சாவடியில் பணியாற்றிய பிரியதர்ஷிணி தாவரவியல் பூங்காவுக்கும், அங்கு பணியாற்றிய உமாராணி வில்லியனூர் உழவர் உதவியகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கான உத்தரவினை சார்பு செயலாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News