செய்திகள்
கோப்புபடம்

மயிலாடுதுறை அருகே முன்விரோதத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது தாக்குதல் - 3 பேர் கைது

Published On 2021-07-15 13:41 GMT   |   Update On 2021-07-15 13:41 GMT
மயிலாடுதுறை அருகே முன்விரோதத்தில் நடந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முத்தையன் மகன் விஜயராகவன் (வயது 28). அதே பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (39). கடந்த 6 மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் இறந்த வீரப்பன் என்பவரின் இறுதி சடங்கின் போது விஜயராகவனுக்கும், பிரபாகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பவத்தன்று பிரபாகரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து விஜயராகவன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டு வாசலில் நின்றுகொண்டு விஜயராகவனை வீட்டைவிட்டு வெளியே வர சொல்லி பிரபாகரன் திட்டியுள்ளார். இதனால் விஜயராகவன் வீட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்கள் விஜயராகவனை சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கினர்.

அப்போது இதனை தடுத்த விஜயராகவனின் மனைவி தனலட்சுமி, தாய் பாஞ்சாலை, சகோதரர் சந்திரன் ஆகிய 3 பேரையும் அந்த கும்பல் தாக்கியது. இதில் காயமடைந்த விஜயராகவன், சந்திரன், தனலட்சுமி, பாஞ்சாலை ஆகிய 4 பேரும் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விஜயராகவன் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக பிரபாகரன் (39), பிரகாஷ் (30), ஆகாஷ் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மகாவிஷ்ணு, சத்தியேந்திரன் ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News