உள்ளூர் செய்திகள்
பிரசன்ன ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
பிரசன்ன ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா மதுரை பெரூம்பட்டூர் பிரசன்ன ஆஞ்சநேயர் கோவில் புதிதாக புதுப்பிக்கப்பட்டு கோவில் முன்பு மண்டபம் கட்டப்பட்டு பஞ்சவர்ணம் தீட்டி இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து 108 கலசம் வைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை வைத்து 3 யாக குண்டங்கள் அமைத்து நெய், பழங்கள், மற்றும் பல்வேறு மூலிகைகள், மூலம் 3 கால யாக பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் மேளதாளத்துடன் புனிதநீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து கோவில் விமானம் கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் புனித நீரை ஊற்றினர். பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரைத் தெளித்தனர்.
இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனை வருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.