உள்ளூர் செய்திகள்
தேர்தல்

அ.தி.மு.க. 3ம் கட்ட அமைப்பு தேர்தல்

Published On 2022-04-16 10:36 GMT   |   Update On 2022-04-16 10:36 GMT
பகுதி, பேரூராட்சி பொறுப்புகளுக்கு மதுரையில் நாளை அ.தி.மு.க. 3ம் கட்ட அமைப்பு தேர்தல் நடைபெற உள்ளது.
மதுரை

மதுரை மாநகர் மாவட்ட பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள், மற்றும் பரவை பேரூராட்சி நிர்வாகிகளுக்கான 2022ம் ஆண்டு அமைப்பு ரீதியான தேர்தல் நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது.இந்த தேர்தல் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள சந்திர குழந்தை மகாலில் நடக்கிறது.

இதுகுறித்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&

நாளை (17ந்தேதி) மதுரை மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி, பேரூராட்சி நிர்வாகிகளுக்கான அ.தி.மு.க. அமைப்புரீதியான 3ம் கட்ட தேர்தல் நடக்கிறது. 

இதில் மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி, மற்றும் பரவை பேரூராட்சி நிர்வாகிகள் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் நாளை மதுரை தெப்பக்குளத்தில் உள்ள சந்திரகுழந்தை மகாலில் நடைபெற இருக்கிற அ.தி.மு.க. அமைப்பு தேர்தலில் விருப்பமனுவை அளிக்கலாம்.

இதற்கு தேர்தல் பொறுப்பாளர்களாக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் கே.அர்ச்சுனன் எம்.எல்.ஏ., மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச்செயலாளர் கந்தசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேற்கண்ட பதவிக்கு போட்டியிடும் நிர்வாகிகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணிக்குள் சரியான நேரத்தில் வந்து விருப்ப மனுக்களை தாக்கல் செய்யுமாறு வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News