செய்திகள்
பல்லடத்தில் ஓடும் பஸ்சில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம் - வாலிபருக்கு தர்மஅடி
அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போடவே, பயணிகள் முருகானந்தத்தை மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் பகுதியை சேர்ந்த 10-ம்வகுப்பு மாணவி அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு அரசு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.
நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டில் அரசு டவுன் பஸ்சில் சென்றார். பல்லடம் திருப்பூர் சாலை கரையான்புதூர் பகுதியில் செல்லும் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி திண்டுக்கல்லை சேர்ந்த முருகானந்தம் (வயது 24) என்பவர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போடவே, பயணிகள் முருகானந்தத்தை மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.