செய்திகள்
கோப்புபடம்

மேட்டுப்பாளையத்தில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ்

Published On 2021-10-16 08:18 GMT   |   Update On 2021-10-16 08:18 GMT
மேட்டுப்பாளையத்தில் பெண் போலீஸ் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை மாவட்டம் காரமடை கணுவாய் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதா (வயது40).

இவர் காரமடை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதா மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் சுதாவிற்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தியடைந்து சாணி பவுடரரை குடித்தது மயங்கி விழுந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அன்னூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News