செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தளி போலீசார் அத்தலவாடி கிராமத்தை சேர்ந்த சுந்தரேஷ் பாபு (வயது 39) என்பவருடைய பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். அப்போது அவர் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சுந்தரேஷ் பாபுவை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.