செய்திகள்

அசாமில் பணி முடிந்து வீடு திரும்பிய சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை

Published On 2018-05-04 07:40 GMT   |   Update On 2018-05-04 07:40 GMT
அசாம் மாநிலம் கோக்ராஜ்கர் பகுதியில் பணிமுடிந்து வீடு திரும்பிய காவல் துணை ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #subinspectormurder #assam
கோக்ராஜகர்:

அசாம் மாநிலம் கோக்ராஜகர் மாவட்டத்தில் காவல்துறையின் கலால் பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நாராயண் போரல், கடந்த புதன்கிழமை பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது உல்தாபானி வனப்பகுதி அருகே அவரை வழிமறித்த மர்ம நபர்கள், அவரை கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு அம்மாநிலத்தின் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறும் காவல்துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. #subinspectormurder #assam
Tags:    

Similar News