உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் ேபாக்சோ சட்டத்தில் கைது

Published On 2022-05-07 09:44 GMT   |   Update On 2022-05-07 09:44 GMT
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் ேபாக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி:

முசிறி மலையப்பபுறம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது உறவினர் வீடு தொட்டியத்தில் உள்ளது.

உறவினர் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொள்ள சென்ற செல்வராஜ், அங்கே விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

உடல் நிலை பாதிக்கப்பட்ட சிறுமி முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சிறுமியின் தாயார் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தன் பேரில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலை ஆய்வாளர் (பொறுப்பு )ராஜேஸ்வரி

உதவி ஆய்வாளர் பானுமதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்
Tags:    

Similar News