செய்திகள்
தற்கொலை

எருமப்பட்டி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-09-20 10:51 GMT   |   Update On 2021-09-20 10:51 GMT
எருமப்பட்டி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள வடவத்தூர் ஊராட்சி தலைமலை வனப்பகுதியில் முதியவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக எருமப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற முதியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர் சென்னையை சேர்ந்த வீராசாமி (வயது 58) என்பதும், இவர் திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தலைமலைபட்டியில் வசிக்கும் அவரது மகள் ஜீவா (35) வீட்டில் கடந்த 6 மாதங்களாக இருந்து வந்தது தெரியவந்தது.

மேலும் அவர் நோய்வாய்பட்டு அவதிப்பட்டு வந்ததாகவும், இதையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்தநிலையில் போலீசார் உடலை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News