செய்திகள்
சரத்குமார்

நடிகர் சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2020-11-06 19:39 GMT   |   Update On 2020-11-06 19:39 GMT
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலாளருமான சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர்:

சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை போனில் பேசிய மர்ம நபர், “கொட்டிவாக்கத்தில் உள்ள நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளருமான சரத்குமார் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். 

இது தொடர்பாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியலிங்கம் தலைமையிலான போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சரத்குமார் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். சுமார் 2 மணிநேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, நடிகர்கள் விஜய், தனுஷ், சூர்யா ஆகியோர் வீட்டுக்கு மிரட்டல் விடுத்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நபர்தான் சரத்குமார் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News