செய்திகள்
வேளச்சேரி அருகே இளம்பெண் மர்மமரணம்
வேளச்சேரி அருகே இளம்பெண் மர்மமாக உயிரிழந்தது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளச்சேரி:
வேளச்சேரியை அடுத்த கோவிலம்பாக்கம், தமிழ்குடிமகன் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கார் டிரைவர். இவரது மனைவி பாரதி (வயது24). இவர்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது. கடந்த 3 மாதத்துக்கு முன்பு பாரதிக்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று பாரதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவரை ரவிச்சந்திரன் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அழைத்து சென்றார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பாரதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பாரதியின் உடலை ரவிச்சந்திரன் வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டார். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே பாரதி இறந்தது பற்றி அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். பாரதியின் சாவில் மர்மம் இருப்பதாக பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் பாரதியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பாரதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
வேளச்சேரியை அடுத்த கோவிலம்பாக்கம், தமிழ்குடிமகன் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கார் டிரைவர். இவரது மனைவி பாரதி (வயது24). இவர்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது. கடந்த 3 மாதத்துக்கு முன்பு பாரதிக்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று பாரதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவரை ரவிச்சந்திரன் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அழைத்து சென்றார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பாரதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பாரதியின் உடலை ரவிச்சந்திரன் வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டார். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே பாரதி இறந்தது பற்றி அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். பாரதியின் சாவில் மர்மம் இருப்பதாக பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் பாரதியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பாரதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.