செய்திகள்
முதல்வராக பதவியேற்ற ரங்கசாமி

புதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்றார்

Published On 2021-05-07 08:08 GMT   |   Update On 2021-05-07 11:21 GMT
ரங்கசாமி பதவியேற்பு விழாவில், எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்த கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்ததால் ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கின. 

என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ரங்கசாமி சட்டமன்ற குழு தலைவராக (முதல்-அமைச்சர்) தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 3-ந்தேதி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் வழங்கினார்.



அதை பெற்றுக்கொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஆட்சியமைக்கும்படி ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி புதுவை முதல்-அமைச்சராக ரங்கசாமி இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

விழாவில், எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News