செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 170 பேர் பாதிக்கப்பட்டனர். 222 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 170 பேர் பாதிக்கப்பட்டனர். 222 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 38 ஆயிரத்து 559 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 36 ஆயிரத்து 696 பேர் குணமாகி உள்ளனர். தற்போது ஆயிரத்து 579 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனிடையே நேற்று கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 55 வயது ஆண், 75 வயது முதியவர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் இறந்வர்களின் எண்ணிக்கை 284 ஆக அதிகரித்துள்ளது.