செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே விபத்தில் பெயிண்டர் பலி
தேன்கனிக்கோட்டை அருகே விபத்தில் பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தசாரபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ்(வயது 30). பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் ஓசூரில் வேலை முடிந்த பின்னர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். உத்தனப்பள்ளி-சின்னலட்சுமிபுரம் அருகே வந்த போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.