செய்திகள்
விபத்து பலி

கந்தம்பாளையம் அருகே விபத்தில் தொழிலாளி பலி

Published On 2020-10-10 11:37 GMT   |   Update On 2020-10-10 11:37 GMT
கந்தம்பாளையம் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள கருக்கம்பாளையம் தொண்டிகாட்டை சேர்ந்தவர் ராமன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அவரது மொபட்டில் பெருங்குறிச்சியில் இருந்து சோழசிராமணி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் வண்ணாம்பாறை என்ற பகுதியில் சென்றபோது கவுண்டிபாளையத்தை சேர்ந்த கடலை வியாபாரி செல்வராசு (45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும், ராமன் மொபட்டும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த ராமனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ராமன் சிகிச்சை பலனின்றி இறந்தார். செல்வராசு சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News