உள்ளூர் செய்திகள்
ரெயிலில் அடிபட்டு முதியவர் உள்பட 2 பேர் பலி
கோவை அருகே ரெயிலில் அடிபட்டு முதியவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை ரெயில் நிலையம் நடைமேடை அருகே கோவை போத்தனூர் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு இறந்து கிடந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொரு சம்பவம்...
இதேபோல் கோவை-பீளமேடு ரெயில்வே தண்டவாளம் சாய்பாபாகோவில் அருகே 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடைலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தண்டவாளத்தில் பிணமாக கிடந்த 2 பேரும் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது தெரியவில்லை. அவர்கள் ரெயில் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயில் மோதி இறந்தாரர்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டனரா? என பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ரெயில் நிலையம் நடைமேடை அருகே கோவை போத்தனூர் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு இறந்து கிடந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொரு சம்பவம்...
இதேபோல் கோவை-பீளமேடு ரெயில்வே தண்டவாளம் சாய்பாபாகோவில் அருகே 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடைலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தண்டவாளத்தில் பிணமாக கிடந்த 2 பேரும் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது தெரியவில்லை. அவர்கள் ரெயில் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயில் மோதி இறந்தாரர்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டனரா? என பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.