செய்திகள்
வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் வைகை அணையில் இருந்து இன்று காலை முதல் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
கூடலூர்:
பெரியாறு, வைகை அணையில் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததுடன் நீர் மட்டமும் உயர்ந்து வந்தது. அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் வைகை அணையில் இருந்து 719 கன அடி மட்டுமே திறக்கப்பட்டது.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 56.07 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 954 கன அடி தண்ணீர் வருகிறது. இன்று காலை முதல் 1119 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2903 மி.கன அடியாக உள்ளது.
பெரியாறு அணையின் நீர் மட்டம் 128.60 அடி. வரத்து 1312 கன அடி. திறப்பு 1300 கன அடி. இருப்பு 4396 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் 60 கன அடி நீரும் உபரியாக வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 435.32 மில்லியன் கன அடியாக உள்ளது.
சோத்துப்பாறை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி நீர் மட்டம் 126.31 அடியாக உள்ளது. இதனால் அணைக்கு வரும் 7 கன அடி நீரும் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.
பெரியாறு 22.9, தேக்கடி 17.4, கூடலூர் 6.8, சண்முகாநதி அணை 3.7, உத்தமபாளையம் 5.2, மஞ்சளாறு 21.6, சோத்துப்பாறை 2, கொடைக்கானல் 8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
பெரியாறு, வைகை அணையில் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததுடன் நீர் மட்டமும் உயர்ந்து வந்தது. அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் வைகை அணையில் இருந்து 719 கன அடி மட்டுமே திறக்கப்பட்டது.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 56.07 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 954 கன அடி தண்ணீர் வருகிறது. இன்று காலை முதல் 1119 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2903 மி.கன அடியாக உள்ளது.
பெரியாறு அணையின் நீர் மட்டம் 128.60 அடி. வரத்து 1312 கன அடி. திறப்பு 1300 கன அடி. இருப்பு 4396 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் 60 கன அடி நீரும் உபரியாக வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 435.32 மில்லியன் கன அடியாக உள்ளது.
சோத்துப்பாறை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி நீர் மட்டம் 126.31 அடியாக உள்ளது. இதனால் அணைக்கு வரும் 7 கன அடி நீரும் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.
பெரியாறு 22.9, தேக்கடி 17.4, கூடலூர் 6.8, சண்முகாநதி அணை 3.7, உத்தமபாளையம் 5.2, மஞ்சளாறு 21.6, சோத்துப்பாறை 2, கொடைக்கானல் 8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.