செய்திகள்
கொலை

திருப்புவனம் அருகே பந்தல் அமைப்பாளர் படுகொலை

Published On 2021-11-08 14:14 GMT   |   Update On 2021-11-08 14:14 GMT
திருப்புவனம் அருகே பந்தல் அமைப்பாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம்:

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே புளியங்குளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 53). இவர் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பூவந்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்த டி.அதிகரை கிராமத்தில் பந்தல் அமைக்க முருகன் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் முருகனை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பூவந்தி போலீசார் முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த மர்ம ஆசாமிகள் யார்? கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News