செய்திகள்
காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் தற்கொலை
காவேரிப்பட்டினம் அருகே காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டினம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை அடுத்த ஜெகதாப்பகுதியை சேர்ந்தவர் சென்றாயன், விவசாயி. இவரது மகள் ரோஜா (வயது 23). பி.எஸ்.சி., பி.எட். படித்துள்ள பட்டதாரி பெண்ணான இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முனியப்பன் என்ற உறவுக்கார வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நேற்று காலை 11 மணிக்கு முனியப்பன் ரோஜாவுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதன்பிறகு மாலை 3 மணிக்கு வீட்டில் ரோஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் திருமணம் செய்தது முதல் ரோஜாவுடன் அவரது பெற்றோர்கள் பேசுவது கிடையாது. மேலும் தலை தீபாவளிக்கு மகளை வீட்டுக்கு அழைக்கவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவேரிப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 4 மாதங்களில் இவர் தற்கொலை செய்து கொண்டதால் கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. வேதநாயகி விசாரணை நடத்தி வருகிறார்.