வழிபாடு
மேல்மருவத்தூர் கோவில்

மேல்மருவத்தூர் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்

Published On 2021-12-31 07:29 GMT   |   Update On 2021-12-31 07:29 GMT
பண்டிகை நாட்களில் வரும் பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாமல் வரும் பக்தர்களை கோவில் நிர்வாகம் அனுமதிக்க கூடாது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் பண்டிகை நாட்களில் அதிக அளவிலான பக்தர்கள் கூட்டம் கூடுவது தொடர்பாக கொரோனா தொற்று பரவலை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

பண்டிகை நாட்களில் வரும் பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாமல் வரும் பக்தர்களை கோவில் நிர்வாகம் அனுமதிக்க கூடாது.

பண்டிகை நாட்களில் கோவில் வளாகத்தில் ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பண்டிகை நாட்களில் வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு கோவில் நிர்வாகத்தின் மூலம் தனி குழு அமைக்க வேண்டும்.

கோவிலில் பணியாற்றி வரும் ஊழியர்கள், தொண்டர்கள் மற்றும் சங்கத்தினர் அனைவரும் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியுள்ளதை உறுதி செய்து, தடுப்பூசி சான்றிதழ்களுடன் கூடிய அறிக்கையினை மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கோவிலுக்கு பணியாற்ற வரும் தொண்டர்கள் மற்றும் சங்கத்தினர் எண்ணிக்கையினை 50 சதவீதமாக குறைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கோவிலின் உள்ளே உள்ள அனைத்து கடைகளையும் பண்டிகை நாட்களில் மூடுவதை உறுதி செய்ய வேண்டும். இதர கடைகள் காலை 4 மணி முதல் 10 மணி வரை மூடுவதை உறுதி செய்ய வேண்டும்.
Tags:    

Similar News