உள்ளூர் செய்திகள்
தேவனாம்பட்டினம் கடலில் ஆனந்த குளியல் போடும் மக்களை படத்தில் காணலாம்.

கடலூர் கடலில் ஆனந்த குளியல்போடும் பொதுமக்கள்

Published On 2022-05-04 11:12 GMT   |   Update On 2022-05-04 11:12 GMT
தாழங்குடா, சுபஉப்பலவாடி, தேவனாம்பட்டினம் கடற்கரையில் தற்போது பொதுமக்களின் கூட்டம் அதிகம் உள்ளது. கடலில் இறங்கி ஏராளமான மக்கள் குளித்து மகிழ்கிறார்கள்.
கடலூர்:

கடலூர் நகரம் கடல்சார்ந்த பகுதியாகும். எனவே எப்போதும் ஓரளவு கடல்காற்று வீசக்கூடும். கடலூர் நகர மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக தேவனாம்பட்டினம் சில்வர்பீச் உள்ளது. அங்கு தான் கடலூர் நகரமக்கள் பொழுதைபோக்குகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கடலூர் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கவில்லை. தற்போது கொரோனா இல்லாததால் கடற்கரைக்கு செல்ல கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டது. அதன்படி கடலூர் மக்கள் கடற்கரைக்கு சென்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீரை வைத்து பல்வேறு பகுதிகளில் விவசாயம் நடந்து வருகிறது. வயல்வெளி பகுதியில் தற்போது பசுமையாக காட்சியளிப்பதால் ஓரளவு குளுமை நிலவுகிறது.

ஆனால் கடந்த சிலநாட்களாக வெயில் கடலூர் நகர் பகுதியில் வறுத்தெடுத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தியதால் மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்.

இன்று முதல் அக்னிநட்சத்திரம் தொடங்கிஉள்ளது. எனவே வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் கொடுமை தாங்காமல் மக்கள் குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க ஏராளமான மக்கள் கடற்கரைக்கு சென்று கடலில் ஆனந்த குளியல் போட்டு வருகிறார்கள்.

தாழங்குடா, சுபஉப்பலவாடி, தேவனாம்பட்டினம் கடற்கரையில் தற்போது பொதுமக்களின் கூட்டம் அதிகம் உள்ளது. கடலில் இறங்கி ஏராளமான மக்கள் குளித்து மகிழ்கிறார்கள்.
Tags:    

Similar News