உள்ளூர் செய்திகள்
குடியாத்தம், காட்பாடி அருகே ரெயிலில் அடிபட்டு பெண் உள்பட 2 பேர் பலி
குடியாத்தம், காட்பாடி அருகே ரெயிலில் அடிபட்டு பெண் உள்பட 2 பேர் இறந்தனர்.
ஜோலார்பேட்டை, மே.6-
காட்பாடி - லத்தேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
பெண் பலி அப்போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் மாநிறம் உடையவராகவும் கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து உள்ளார் இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
குடியாத்தம்இதே போன்று குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று முன்தினம் அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே நாளில் காட்பாடி ஜோலார்பேட்டை மார்க்கத்தில் அடுத்தடுத்து 2 இடங்களில் ரெயிலில் அடிபட்டு ஒரு பெண் பலியான சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.