செய்திகள்
திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா

திருத்தணி, பள்ளிப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை- மாவட்ட கலெக்டர்

Published On 2020-10-31 09:56 GMT   |   Update On 2020-10-31 09:56 GMT
ஆந்திர மாநில அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் திருத்தணி, பள்ளிப்பட்டு கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நேற்று இரவு 9.30 மணி முதல் இன்று(சனிக்கிழமை) காலை 4 மணி வரை ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 600 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அதன்பிறகு அங்கு தொடர் மழையின் இருப்பின் இந்த தண்ணீர் அளவு உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் நகரி ஆற்றின் வழியாக பூண்டி அணை வரை வரும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், திருத்தணி, பள்ளிப்பட்டு கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும் இத்தகவல் வருவாய்துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News