உள்ளூர் செய்திகள்
மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.

மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை

Published On 2022-01-11 08:41 GMT   |   Update On 2022-01-11 08:41 GMT
மணவெளி தொகுதியை சேர்ந்த மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
புதுச்சேரி:

புதுவை அரசு சமூக நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது. 

அதுபோல் மணவெளி தொகுதியை சேர்ந்த 336 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மணவெளி புருஷோத்தமன் சமுதாய நலக்கூடத்திலும், தவளக்குப்பம் மீனாட்சி சிவபாக்கியம் மஹால் திருமண நிலையத்திலும் நடந்தது. 

நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் வழங்கினார்.  இந்த அடையாள அட்டை மாற்றுத்திறனாளிகளின் மாற்றுத்திறன் சார்ந்த எல்லா தகவல்களும் உள்ளடக்கியதாக இருக்கும். மேலும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற அனைத்து திட்டங்களையும் இந்த  அட்டை மூலம் இனி பெற முடியும். 

மேலும் இந்த அட்டையை அரசின் அனைத்து திட்டத்திற்கும் அடையாள அட்டையாக பயன்படுத்த முடியும். இந்த தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் விழாவில் சமூகநலத்துறை துணை இயக்குனர்  கலாவதி மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் மணவெளி தொகுதி முக்கிய பிரமுகர்கள் ராமு, ரகுபதி, காமராஜ், லட்சுமிகாந்தன், கிருஷ்ணமூர்த்தி தட்சிணாமூர்த்தி, கலைவாணன், செந்தில், சக்திவேல், தணிகாசலம், ஆறுமுகம், குமாரசாமி, விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News