ஆட்டோமொபைல்
வால்வோ கார்

மூன்று புது கார்களை அறிமுகம் செய்யும் வால்வோ

Published On 2021-07-14 07:42 GMT   |   Update On 2021-07-14 07:42 GMT
வால்வோ நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று புது கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


ஸ்வீடன் நாட்டு வாகன உற்பத்தியாளரான வால்வோ இந்தியாவில் புது கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. வால்வோ நிறுவனத்தின் XC40 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இத்துடன் 2021 இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் S90 பிரீமியம் செடான் மற்றும் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலான XC60 அறிமுகமாக இருக்கிறது.

எலெக்ட்ரிக் மாடலான XC40 ரீசார்ஜ் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவுக்கு இறக்குமதி  செய்யப்படுகிறது. இது பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாக இருக்கிறது. வால்வோ XC40 ரீசார்ஜ் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களை கொண்டிருக்கிறது. இதில் உள்ள 78kWh பேட்டரி வழங்கப்படுகிறது.



இது 397 பி.ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த  கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

வால்வோ S90 மற்றும் XC60 மாடல்களில் பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. 2021 முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் வால்வோ கார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை 52 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
Tags:    

Similar News