செய்திகள்
கோப்பு படம்.

கடலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா

Published On 2021-02-27 12:24 GMT   |   Update On 2021-02-27 12:24 GMT
கடலூர் மாவட்டத்தில் நேற்று 200-க்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் புதிதாக 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 141 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 287 பேர் பலியான நிலையில், 24 ஆயிரத்து 799 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில் நேற்று 200-க்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் புதிதாக 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. 

இதுதவிர நேற்று 8 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும் 275 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு இன்னும் வரவேண்டியுள்ளது.
Tags:    

Similar News