செய்திகள்
தற்கொலை

லாலாபேட்டை அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-09-10 08:48 GMT   |   Update On 2021-09-10 08:48 GMT
லாலாபேட்டை அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாலாபேட்டை:

லாலாபேட்டை ஆண்டியப்ப நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 33), கொத்தனார். இவரது மனைவி தெய்வானை (26). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த பாலமுருகன் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News