செய்திகள்
தற்கொலை

நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டல் விடுத்ததால் டிரைவர் தற்கொலை

Published On 2020-09-29 08:01 GMT   |   Update On 2020-09-29 08:01 GMT
புதுக்கோட்டை அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டலால் டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 28). டிரைவரான இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று 2 சரக்கு ஆட்டோக்கள் வாங்கி ஓட்டி வந்தார்.

போதிய வருமானம் கிடைக்காததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் அந்த இரு வாகனங்களையும் கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் வினோத் குமாரிடம் பறிமுதல் செய்த இரு வாகனங்களையும் தனியார் நிதி நிறுவன நிர்வாகம் வேறு நபர்களிடம் விற்பனை செய்து விட்டனர். ஆனால் அதன் பிறகு கடன் தொகையை விட குறைந்த தொகைக்கே வாகனங்கள் விற்பனை செய்துள்ளதாக கூறி மீதி தொகையை செலுத்தக்கோரி கடந்த ஒரு வாரமாக தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வினோத் குமார் வீட்டிற்கு சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் இருந்ததால் தன்னால், தற்போது கடன் நிலுவை தொகையை கட்ட முடியாது. நிலைமை சீரான பிறகு கட்டுவதாக கூறியுள்ளார். ஆனால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று மிரட்டினர்.

இதனால் கடந்த சில நாட்களாக மிகவும் மனமுடைந்து காணப்பட்ட வினோத் குமார் வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வினோத் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டலால் டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News