விளையாட்டு
புஜாரா-ரிஸ்வான்

கவுண்டி கிரிக்கெட்: ஒரே அணியில் ஆடும் புஜாரா-ரிஸ்வான்

Published On 2022-04-15 08:26 GMT   |   Update On 2022-04-15 08:26 GMT
இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணிக்காக இணைந்து விளையாடுவது ரசிகர்களின் கவனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
லண்டன்:

இங்கிலாந்து நாட்டில் கவுண்டி கிரிக்கெட் மிகவும் பிரபலம் பெற்றது. இதில் உள்நாட்டு வீரர்களுடன் வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாடுவது வழக்கம்.

இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா கடந்த 2014 முதல் கவுண்டி போட்டியில் வெவ்வேறு அணிக்காக ஆடினார். இந்த சீசனில் சசெக்ஸ் அணிக்காக ஆடுகிறார். இதேபோல் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானும் இந்த சீசனில் முதல் முறையாக சசெக்ஸ் அணியில் ஆடுகிறார்.

இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணிக்காக இணைந்து விளையாடுவது ரசிகர்களின் கவனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. அவர்கள் இருவரும் சசெக்ஸ் அணியின் ஜெர்சியில் இணைந்து ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News