செய்திகள்
கோப்புபடம்

காங்கேயம் - உடுமலை பகுதியில் நாளை மின்தடை

Published On 2021-10-24 06:51 GMT   |   Update On 2021-10-24 06:51 GMT
ஓலப்பாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
காங்கேயம்:

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஓலப்பாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கயம்பாளையம், முருகன்காட்டு வலசு.

மேலும் பழையகோட்டை துணை மின் நிலையத்திற்குட்பட்ட  பழையகோட்டை, நத்தக்காடையூர், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம் பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலையை அடுத்துள்ள பூளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் சி.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அதன்படி மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ. அம்மாபட்டி, தொட்டியன்துறை, மானூர்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டு வேலான்பட்டி, வடுகபாளையம், பொட்டிகாம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, லிங்கமநாயக்கன்புதூர், சுங்காரமுடக்கு, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், ஆமந்தகடவு, சிக்கனூத்து ஆகிய பகுதிகள் ஆகும். 
Tags:    

Similar News