செய்திகள்
பிரதமர் மோடியின் அத்தை கொரோனா தாக்குதலுக்கு உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பிரதமர் மோடியின் அத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காந்திநகர்:
பிரதமர் மோடியின் அத்தை பெயர் நர்மதாபென் மோடி(80). கணவரை இழந்த நர்மதாபென் தனது குடும்பத்தினருடன் குஜராத் மாநிலம் அலகாபாத்தில் உள்ள நியூராணிப் பகுதியில் வசித்து வந்தார்.
இதற்கிடையில், நர்மதாபென்னுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் அலகாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் அத்தை நர்மதாபென் மோடி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நர்மதாபென்னின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.