செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

கண்ணமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி

Published On 2021-10-08 09:26 GMT   |   Update On 2021-10-08 09:26 GMT
கண்ணமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள அரியபாடி ஊராட்சி, சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். அவரது மகன் ராஜ்கமல் (வயது 24), ஒண்ணுபுரம் மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அத்திமலைப்பட்டு-ஆரணி ரோட்டில் செல்லியம்மன் கோவில் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ராஜ்கமல் ஏறியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News