செய்திகள்

சீனாவில் மருந்து தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து - 10 பேர் பலி

Published On 2019-04-15 15:20 GMT   |   Update On 2019-04-15 15:20 GMT
சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் அமைந்துள்ள மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உடல் கருகி பலியாகினர். #ChinaFire
பெய்ஜிங்:

சீனாவின் ஷாங்காங் மாகாணத்தில் செயல்பட்டு வரும் மருந்து தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென தீப்பற்றியது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பலர் சிக்கினர்.

தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகியும், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனாவில் கடந்த மாதம் நடைபெற்ற மூன்று தீவிபத்துகளில் சிக்கி 13 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. #ChinaFire
Tags:    

Similar News