செய்திகள்
வெயில் அதிகரிப்பு

கூத்தாநல்லூரில் சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்கள் அவதி

Published On 2021-06-17 10:58 GMT   |   Update On 2021-06-17 10:58 GMT
கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது.
கூத்தாநல்லூர்:

அக்னி நட்சத்திரம் கடந்த மே மாதம் 29-ந் தேதி முடிவுற்ற நிலையிலும், திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கிடையே லேசான மழை பெய்தாலும் வெயிலின் தாக்கமே அதிகளவில் இருந்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளில் இருந்து வரும் நிலையில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை முதல் கூத்தாநல்லூர் பகுதியில் கடுமையான வெயில் நிலவியது. நேற்று காலை 11 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்து மாலை வரை கடுமையான வெயிலாக சுட்டெரித்ததால் நகர் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது.
Tags:    

Similar News