தொழில்நுட்பம்
ரெட்மி நோட் 8 ப்ரோ

கோரல் ஆரஞ்சு நிறத்தில் அறிமுகமான ரெட்மி நோட் 8 ப்ரோ

Published On 2020-08-11 05:05 GMT   |   Update On 2020-08-11 05:05 GMT
சியோமியின் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் கோரல் ஆரஞ்சு நிற வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் டீசரை சியோமி வெளியிட்டு இருந்தது.

தற்சமயம் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் எலெக்ட்ரிக் புளூ, கோரல் ஆரஞ்சு, காமா கிரீன், ஹாலோ வைட் மற்றும் ஷேடோ பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. புதிய கோரல் ஆரஞ்சு நிற ஸ்மார்ட்போனின் விலை ஏற்கனவே கிடைக்கும் நிறங்களின் விலையிலேயே கிடைக்கும் என தெரிகிறது.



சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் மற்றும் ஹெச்டிஆர் வசதி, மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 1/1.7″ சாம்சங் GW1 சென்சார் மற்றும் ISOCELL பிளஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 120 அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி கேமரா கொண்டிருக்கிறது.

முன்புறம் 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3டி வளைந்த கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. 
Tags:    

Similar News