செய்திகள்
உத்தனப்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது
உத்தனப்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டி.குருபரபள்ளி பகுதியில் உள்ள கோவில் பின்புறம் லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியை சேர்ந்த சேர்ந்த கிட்டப்பா (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு, பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.