செய்திகள்
கும்பகோணத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு - 2 பேர் கைது
கும்பகோணத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஹாஜியார் தெருவை சேர்ந்தவர் முகமதுஜெயின்(வயது 45). இவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது இவரது கடைக்கு செல்போன் வாங்க 2 பேர் வந்தனர். இவர்கள் செல்போனை பார்ப்பது போல நடித்து நைசாக ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 4 செல்போன்களை திருடிக்கொண்டு அங்கிருந்து செல்ல முயன்றனர்.
உடனே சுதாரித்துக்கொண்ட முகமதுஜெயின் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள்
கும்பகோணம் கக்கன் காலனியை சேர்ந்த சீனு மகன் முருகன்(42) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கண்ண தாசன் மகன் வசந்தகுமார் (38) என்பதும் அவர்கள் கடையில் இருந்து செல்போனை திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் முருகன், வசந்தகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஹாஜியார் தெருவை சேர்ந்தவர் முகமதுஜெயின்(வயது 45). இவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது இவரது கடைக்கு செல்போன் வாங்க 2 பேர் வந்தனர். இவர்கள் செல்போனை பார்ப்பது போல நடித்து நைசாக ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 4 செல்போன்களை திருடிக்கொண்டு அங்கிருந்து செல்ல முயன்றனர்.
உடனே சுதாரித்துக்கொண்ட முகமதுஜெயின் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள்
கும்பகோணம் கக்கன் காலனியை சேர்ந்த சீனு மகன் முருகன்(42) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கண்ண தாசன் மகன் வசந்தகுமார் (38) என்பதும் அவர்கள் கடையில் இருந்து செல்போனை திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் முருகன், வசந்தகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.