செய்திகள்
விஜயகாந்த் அரசியலில் சாதித்தது என்ன? - அமைச்சர் பாஸ்கரன் கேள்வி
விஜயகாந்த் அரசியலுக்கு வந்து சாதித்தது என்ன? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் பாஸ்கரன், இனி அரசியலுக்கு நடிகர்கள் வந்தாலும் ஒன்றும் சாதிக்க முடியாது என்று கூறினார்.
சிவகங்கை:
சிவகங்கையில் கால்நடைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு கால்நடை தீவனங்கள் மற்றும் தீவனங்கள் தயாரிக்கும் எந்திரங்களை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்தார்கள். விஜயகாந்த்தும் கட்சி ஆரம்பித்தார். அரசியலுக்கு வந்து அவர் சாதித்தது என்ன? இனி அரசியலுக்கு நடிகர்கள் வந்தாலும் ஒன்றும் சாதிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கையில் கால்நடைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு கால்நடை தீவனங்கள் மற்றும் தீவனங்கள் தயாரிக்கும் எந்திரங்களை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சிவகங்கையில் பாதாள சாக்கடை பணிகள் உள்ளாட்சி தேர்தலுக்குள் முடிவடையும். காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு சிவகங்கை மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை.
நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்தார்கள். விஜயகாந்த்தும் கட்சி ஆரம்பித்தார். அரசியலுக்கு வந்து அவர் சாதித்தது என்ன? இனி அரசியலுக்கு நடிகர்கள் வந்தாலும் ஒன்றும் சாதிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.