செய்திகள்
கிரன் பொல்லார்ட்

நாங்கள் நினைத்ததை செயல்படுத்தவில்லை - கிரன் பொல்லார்ட்

Published On 2019-12-12 08:03 GMT   |   Update On 2019-12-12 08:03 GMT
நாங்கள் நினைத்ததை செயல்படுத்தாத காரணத்தினாலேயே இந்த டி20 தொடரில் தோல்வி அடைந்தோம் என வெஸ்ட் அணி கேப்டன் கிரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
மும்பை:

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 க்கு என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. நேற்று மும்பை நகரில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக 3-வது முறை 20 ஓவர் தொடரை கைப்பற்றி முத்திரை பதித்தது. இந்த தொடரின் தொடர்நாயகன் விருது விராட் கோலிக்கு கிடைத்தது. இந்த டி20 தொடரில் அவர் 2 அரை சதத்துடன் 183 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில், நாங்கள் நினைத்ததை செயல்படுத்தாத காரணத்தினாலேயே இந்த டி20 தொடரில் தோல்வி அடைந்தோம் என வெஸ்ட் அணி கேப்டன் கிரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.

‘இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை அளித்தனர். அதன் பின்னர்  இரு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய நாங்கள் ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். அந்த இடத்தில் நாங்கள் எங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. அதுவே இந்த தொடரின் தோல்விக்கு காரணம். நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். 

இதற்கு முன்பு 200 ரன்களுக்கு மேற்பட்ட இலக்குகளை சேசிங் செய்துள்ளோம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 230 ரன்களை சேசிங் செய்துள்ளோம். இந்த மைதானத்திலேயே (மும்பை) 220 ரன்கள் சேசிங் செய்யப்பட்டுள்ளது. அதனால் நேற்றைய இலக்கு (240 ரன்கள்) ஒன்றும் கடினமானது இல்லை. ஆனால் இறுதியில் நாங்கள் தடுமாறிவிட்டோம்’ என பொல்லார்ட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
Tags:    

Similar News