செய்திகள்
கோப்புபடம்

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மேலும் 52 பேருக்கு கொரோனா

Published On 2021-07-26 14:53 GMT   |   Update On 2021-07-26 14:53 GMT
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 23 பேருக்கு தொற்று உறுதியானது. மாவட்டம் முழுவதிலும்‌ அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 237 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 315 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 மாவட்டங்களிலும் நேற்று கொரோனாவிற்கு உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News