செய்திகள்
கோப்பு படம்

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது

Published On 2019-10-03 11:34 GMT   |   Update On 2019-10-03 11:34 GMT
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவுப்படி போலீசார் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கீழ்வேளூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ராதாமங்கலம் பகுதியில் சாராயம் விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 37) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து, அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சாராயம் விற்பனை செய்த சிக்கல் அருகே பனை மேடு காலனி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மணி(34), ஆழியூரை அடுத்த சிக்கவலம் மெயின் சாலையை சேர்ந்த மகேந்திரன்(54) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News