செய்திகள்
கோப்பு படம்

சென்னையில் 385 பேர், கோவையில் 146 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்

Published On 2020-11-30 17:22 GMT   |   Update On 2020-11-30 17:22 GMT
தமிழகத்தில் இன்று 1 ஆயிரத்து 410 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 1 ஆயிரத்து 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 81 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 997 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 1 ஆயிரத்து 456 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 59 ஆயிரத்து 206 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை
11 ஆயிரத்து 712 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 0
செங்கல்பட்டு - 84
சென்னை - 385
கோவை - 146
கடலூர் - 24
தர்மபுரி - 11
திண்டுக்கல் - 33
ஈரோடு - 59
கள்ளக்குறிச்சி - 6
காஞ்சிபுரம் - 55
கன்னியாகுமரி - 24
கரூர் - 18
கிருஷ்ணகிரி - 9
மதுரை - 32
நாகை - 23
நாமக்கல் - 31
நீலகிரி - 38
பெரம்பலூர் - 0
புதுக்கோட்டை - 9
ராமநாதபுரம் - 6
ராணிப்பேட்டை - 15
சேலம் - 59
சிவகங்கை - 11
தென்காசி - 6
தஞ்சாவூர் - 33
தேனி - 7
திருப்பத்தூர் - 14
திருவள்ளூர் - 69
திருவண்ணாமலை - 8
திருவாரூர் - 15
தூத்துக்குடி - 12
திருநெல்வேலி - 9
திருப்பூர் - 73
திருச்சி - 26
வேலூர் - 37
விழுப்புரம் - 15
விருதுநகர் - 8
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 0
உள்நாடு - 0
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 1,410
Tags:    

Similar News