ஆன்மிகம்
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

Published On 2021-02-24 08:51 GMT   |   Update On 2021-02-24 08:51 GMT
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி முதல் 10-ந் தேதிவரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று காலையில் சுப்ரபாதம், சுவாமியை எழுப்பி தோமாலசேவா கொலுவு பஞ்சாங்க சிரவணம் நடைபெற்றது.

காலை 6 மணி முதல் ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அதன்பிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News